தற்கொலை செய்ய முயற்சித்த பெண்னை காப்பாற்றுவதற்காக நீர்தேக்கத்தில் பாய்ந்து உயிர்நீத்த நபரின் இறுதிக்கிரியைகள்

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)
கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை முயற்சிக்கு குதித்த பெண்னை
காப்பாற்றுவதற்காக நீர்தேக்கத்தில் பாய்ந்து உயிர் நீத்த நபரின்
இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.


தலவாக்கலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை முயற்சிக்காக
நீர்தேக்கத்தில் பாய்ந்த பெண்னை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்தில்
பாய்ந்து உயிர் நீத்த நபரின் இறுதி கிரியைகள் 23.05.2020.சனிக்கிமை இடம்பெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் தலவாக்கலை கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக பெண்ணொருவர் பாய்ந்ததை கண்டு குறித்த பெண்னை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்தில் பாய்ந்த போது குறித்த பெண் பாதுகாப்பாக தலவாக்கலை பொலிஸாரினால் மீட்டெடுக்கபட்டதோடு குறித்த நபர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32வயதுடைய
ஹமித் ரிஸ்வான் என்பவராவார். இவரின் சடலம் பொலிஸாரினால்
மீட்கபட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை நிறைவடைந்த உடன் 22.05.2020 வெள்ளிகிழமை மாலை சடலம் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஹமித் ரிஸ்வானின் உடலுக்கு தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது மக்கள், தேரர் என பலரும் அஞ்சலி செலுத்தியதோடு இன்றய தினம் மத அனுஸ்டாங்களோடு இறுதி கிரியைகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடதக்கது.