சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா ? நுகர்வோர் அதிகாரசபையின் பதில்

(ஜே.எப்.காமிலா பேகம்)
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.