நேற்றைய வெடிப்பு சம்பவம் தொடர்பாக யாழ் கட்டளை தளபதி



(ஜே.எப்.காமிலா பேகம்)
யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

நாகர்கோவில் பகுதியில் நேற்று பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, இது மணற்கொள்ளையில் ஈடுபடுவோர் செய்த குற்றச்செயல் என்றும், இதனால் பொது மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படவில்லை எனவும் கூறினார்.