ஓமானில் இருந்து 228 பேர் இலங்கைக்கு!

ஓமானில் இருந்து 228 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நெருக்கடியை சந்தித்த இவர்கள் இன்று அதிகாலை சிறப்பு விமானம் மூலம் மஸ்கட் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.