வெலிக்கட சிறையின் பெண்கள் பிரிவிலிருந்து 28 அலைபேசிகள் மீட்பு


வெலிக்கட சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவினரால், வெலிக்கட சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 28 அலைபேசிகள், 200 பெட்டரிகள், 8 சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்கள் வெலிக்கட சிறைச்சாலையின் மதிலுக்கு அப்பால் உள்ள சீவலி ஒழுங்கைப் பிரதேசத்திலிருந்து சிறைக்குள் வீசப்பட்டிருக்கலாம் என, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதே போல் குறித்த சிறைக்கூண்டின் கூரைக்கு அடியில், மலசலக்கூடம், கழிவுக்கூடை என்பவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.