நிதி மோசடியுடன் தொடர்புடைய 57 பேர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற நிதி மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய 57 பேர் நேற்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண ஊழல் விசாரணை பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 48 ஆண்களும் 9 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பண மோசடி, நிதி சட்டத்தை மீறியமை, போலி ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட 70 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றங்களில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.