கல்முனையில் மாபெரும் இரத்த தான நிகழ்வு!

ஸ்ரீலங்கா டெலிகொம் கல்முனை பிராந்திய கிளையினால் மாபெரும் இரத்த தான நிகழ்வு கல்முனை டெலிகொம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் இன்று(05) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்களுடன் கல்முனை விகாரை விகாராதிபதி உட்பட பல்வேறு விளையாட்டு கழகங்கள் மற்றும் வணக்க ஸ்தலங்களில் இருந்து பலரும் வருகை தந்து இவ் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்திருந்தனர்.

இந் இரத்த தான நிகழ்வை நடாத்திய கல்முனை வடக்கு ஆதரா வைத்தியசாலையின் Dr. ரமேஷ் மற்றும் அவரது குழுவினருக்கும் அத்துடன் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் கல்முனை பிராந்திய ஊழியர்கள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் இது போன்ற சமூக நலன் சேவைகளை இனி வரும் நாட்களிலும் ஸ்ரீலங்கா டெலிகொம் கல்முனை பிராந்திய கிளையினால் தொடர்ச்சியாக நடாத்த தீர்மானித்திருப்பது குறிப்பிடத்தக்கது.