நாட்டில் இன்னுமொரு உயிர் கொரோனாவுக்கு பலி; 17 வது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

கம்பஹா- ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.