கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் - GMOA


கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பும் அதிக ஆபத்துள்ள பகுதியாக இனம் காணப்பட்டுள்ளது என என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அர சமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். நாளொன்றிற்கு பத்தாயிரம் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை செய்வதற்கு கொரோனா வைரஸ் சோதனை தொடர்பான கொள்கைகளை தரமுயர்த்தவேண்டும், சரியான சோதனை கொள்கைகளை அறிவிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்