தனியார் சிகிச்சை நிலையத்தின் வைத்தியருக்கு வைரஸ் தொற்று; 500 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் !

ருவன்வெல்ல- அங்குருவெல்ல நகரில் தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற வைத்தியருக்கும் அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவரிடம் சிகிச்சைகளுக்காக வந்த 500க்கும் மேற்பட்டடோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார பரிந்துரைகளை பின்றபற்றாது குறித்த வைத்தியர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளதாக பொது மக்கள் சிலர் முறையிட்டுள்ளதாக ருவன்வெல்ல சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.