வாளுடன் நடமாடிய இளைஞரை மடக்கிப்பிடித்த ஊர் மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்த கிராம மக்கள் வாளுடன் நடமாடிய வாள்வெட்டுக் குழுவினை சேர்ந்த ஒருவரை மடக்கி பிடித்து புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

சனி, ஞாயிறு நாட்களில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் விதவைப்பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாள்வொட்டு குழு வீட்டிற்கு வரவா இல்லை உன் மகளை கடத்துவோம் என மிரட்டல் விடுவதாகவும் இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு பொலிசாருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில். இன்று(15) காலை வாளுடன் வெட்ட வந்தவர்களை பிடித்த கிராம இளைஞர்கள் அதில் ஒவரை பிடித்து வீட்டில் கட்டி வைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக வாள்களுடன் நடமாடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.