திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட ஜின்னா நகர் ஆலிம் நகர், பெரியபாலம் பிரதேசங்களைச் சேர்ந்த ஐவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 25, 23, 22 மற்றும் 24 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் பாவிக்க முற்படும் போது திருகோணமலை சர்தாபுர விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஐவரும் இன்று(26) கைது செய்யப்பட்டு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரிடமிருந்து இரண்டு கிராம் இருபது மில்லிகிராம் ஹெரோயின் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட ஐவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4