பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

(சித்தா)

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வின் தேசியக் கொடியினை நிறுவனத் தலைவரான வலயக் கல்விப் பணிப்பாளர்; திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டு அலுவலக உத்தியோகஸ்த்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து சமய ஆராதனைகள் நடைபெற்றதுடன் வரவேற்புரையினையினையும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விசேட உரையினையினையும் வலயக் கல்விப் பணிப்பாளர் நிகழ்த்தினார்.

இன்றைய 73 ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாடி நினைவுகூருமுகமாக அலுவலகத்தில் சிரமதான நிகழ்வும் பயன்தரு மரக்கன்றுகளும் நடப்பட்டது.