அக்கரைப்பற்று , ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தாயை இழந்த 34 வயது பெண் ஒருவர் இரண்டு கிட்ணியும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர் ப.சுரந்தமுதன் , போரதீவினை சேர்ந்த சமூக சேவையாளர் எம்.கோபிநாத் , Battinews ஸ்தாபகர் இரா.சயனொளிபவன் ஆகியோர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மருத்துவ செலவிற்காக பிரான்ஸ் சக்கரவர்த்தி நற்பணி மன்றம் வழங்கிய 25,000 ரூபா காசோலையை வழங்கி வைத்தனர்
தாயை இழந்த நிலையில் 4 பிள்ளைகளுடன் வாடகைவீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என ஒரு வீடு கட்டப்பட்டு முடியாத நிலையில் உள்ளது . மலசல கூட வசதி இல்லாமல் இருந்தது .