மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோண்றிஸ்வரா ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள மகா சிவராத்திரி விழா பூஜை வழிபாட்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பூஜை நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவே பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்து கொள்ளுமாறும் வீட்டில் இருந்து வழிபாடுகளில் ஈடுபடுமாறு ஆலைய பரிபாலனசபை செயலாளரும் வண்ணக்கருமான இளையதம்பி சாந்தலிங்கம் பக்த அடியார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் மகா சிவராத்திரி பூஜை வழிபாட்டிற்கு பிற மாவட்டங்களில் இருந்து இலச்சக் கணக்கான பக்தர்கள் எம்பெருமனை வந்து தரிசித்துச் செல்வது வழமை இருந்தபோதும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மகா சிவராத்திரி பூஜை விழிபாட்டில் பக்த்தர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு இந்தவருடம் ஆளாகியுள்ளோம்.
எனவே இந்த ஆண்டு இடம்பெறம் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளை ஊடகங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளோம். எனவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்த அடியார்கள் ஆலயத்துக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருந்து வழிபாடு செய்யுமாறும் எங்களையும் பாதுகாத்து பிறரையும் பாதுகாக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆலய பரிபாலனசபை பக்த அடியார்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவராத்திரி பூஜை battinews இல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் -
https://www.facebook.com/battinews எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்