இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைபொருள் கடத்தும் சுலஷசன் உட்பட 4 பேர் 07 கிலோ ஜஸ்போதைப் பொருள் உடன் கைது!



(க.சரவணன்)
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைவஸ்து கடத்தும் முக்கிய நபரான சுலஷசன் உட்பட 4 பேரை 7 கிலோகிராம் ஜஸ் போதைப்பொருளும் 5 கிராம் ஹரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு சப் இன்பெக்டர் சி.மேனனுக்கு கிடைத்த கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சி.ஜ.பிரான்சிஸ் தலைமையில் சப் இன்பெக்ஸ்டர் சி.மேனன் உட்பட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று  ஞாயிற்றுக்கிழமை (25) பகல் குருநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றி வழைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு பகுங்கியிருந்த இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைவஸ்து கடத்தும் நீண்டகாலமாக பொலிசாரால் தேடப்பட்டுவந்த பிரதான சூத்திரதாரியான குருநகர் சுலஷசன் உட்பட 4 பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து 7 கிலோகிராம் ஜஸ்போதைவஸ்து மற்றும் 5 கிராம் ஹரோயின் போதைபொருள் ஆகியவற்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வுள்ளதாகவும் அதற்கான நீதிமன்ற உத்தரவுபெறுவதற்கான நடவடிக்கை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.