திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக கபில களுப்பான நியமனம்!



ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக கபில களுப்பான நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து இந்த அமைப்பாளருக்கான நியமனத்தை வழங்கினார்.

இதன்போது, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.