மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிளொன்றும் கார் ஒன்றும் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி! ஒருவர் படுகாயம்


காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதி பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் சிறிய ரக கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தின்போது 

மோட்டார் சைக்கிளில் பயணித்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ராஜஸ்வரன் ரஞ்சித் வயது 55 என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.