( வி.ரி.சகாதேவராஜா)
கடந்த மூன்று தின முடக்கலையடுத்து நேற்று(17) திங்கட்கிழமை கிழக்கு மாகாணம் வழமைக்குத் திரும்பியுள்ளது.
கடைகள் திறக்கப்பட்டு வாகனங்கள் வீதியில் தாராளமாகப் பயணித்தன. அரச அலுவலகங்கள் சட்டதிட்டத்திற்கமைவாக குறைந்தளவு அலுவலர்களுடன் இயங்கின.
அடையாளஅட்டையுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியெறலாமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.