நிந்தவூரில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு - மூவர் படுகாயம்

கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அக்கரைப்பற்று 19 பிரிவு காசிம் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சம்சுதீன் சஹாப்தீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நிந்தவூர்- அட்டப்பள்ளம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றினை நோக்கி பயணித்த டொல்பீன் ரக வான் ஒன்று அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து வானின் ரயர் ஒன்று வெடித்ததையடுத்து வானின் வேககட்டுப்பாட்டை மீறி, எதிரே அக்கரைப்பற்றில் இருந்து நிந்தவூருக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் பிரயாணித்த மோட்டர் சைக்கிளுடனும் இன்னொரு மோட்டர் சைக்கிளுடனுமாக இரு மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையைர் உயிரிழந்ததுடன் மகன் உட்பட 3 பேர் படுகாயமடைந்து நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வானை செலுத்திய சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது