அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை அனுமதி



அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இருப்பினும் பால்மா, சீமெந்து, கோதுமை மா மற்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் குறித்து எந்த முடிவும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.