‘குட்டிப்புலி’ கும்பலின் தலைவர் கைக்குண்டுடன் கைது!



திருகோணமலை மாவட்டம், உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவநகர் நகர் பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெளி பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகல்களுக்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேவநகர் பிரதேசத்தை சேர்ந்த பாபு என்றழைக்கப்படும் குமார் அந்தோணி பிரான்சிஸ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வடக்கில் ஆவா கும்பலைப் போன்று குட்டிப்புலி எனும் ஒரு கும்பலை உருவாக்கி உள்ளூர் மக்களை மிரட்டி பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரைணைகளில் தெரியவந்துள்ளது என்றும் உப்புவெளிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்றக்கொண்டு வருகின்றனர்.