பணிப்பாளரிடம் இருந்து சிவப்பு எச்சரிக்கை!


நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவல் குறைவடையவில்லை. இன்னும் வேகமாக பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக, சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே, இதனை தெரிவித்தார்.