நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு?



ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாட்டை முடக்கத்திலிருந்து விடுவித்து, இரவு நேரங்கங்களில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கமைய, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவ்வாறு திறக்கப்படும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.