பாகிஸ்தானிலிருந்து பிரியந்தவிற்கு தொடர்ச்சியாக பணம் – அறிவிப்பு வெளியானது



பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்காக, சியல்கோர்ட் நகர வர்த்தக சங்கம் நிதியமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிதியத்திற்கு இதுவரை ஒரு லட்சம் அமெரிக்க டொலர் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரியந்த குமாரவின் மாதாந்த சம்பளத்தை, அவரது குடும்பத்திற்கு தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிக்கின்றார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வெளியில் வருவதற்கு பாகிஸ்தான் இடமளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.