தங்கையின் பாசத்தால் சகோதரன் செய்த செயல்



உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மகன் ஒருவர் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று கொச்சிக்கடை - கெமுனு மாவத்தை, மேற்கு கட்டான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மேற்கு கட்டான கெமுனு மாவத்தையில் வசிக்கும் 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தந்தை குடிபோதையில் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மதிய உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை மகளை தாக்கியுள்ளார்.

அப்போது மகன் தந்தையை கத்தியால் குத்தியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.