எம்.பி ஒருவருக்கு முகநூலில் அச்சுறுத்தல் விடுத்த மர்ம நபர்


முகநூல் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடிதம் ஊடாக ஹாலி-எல பொலிஸாரிடம் அவர் முறைப்பாடொன்றை கையளித்துள்ளார்.

ஹாலி-எல, பண்டாரவளை வீதியில் வசிக்கும் ஒருவரால், இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.