இலங்கையில் புதிதாக 96 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ள லங்கா ஐ.ஓ.சி !



இலங்கையில் புதிதாக 96 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் பணிப்பாளர் விக்யான் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்து 20 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, நாரஹேன்பிட்டி - எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

அதில் கலந்துக்கொண்டு கருத்துவெளியிட்டபோதே இதை கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான 214 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ள நிலையில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார்.