திருக்கோவில் விநாயகபுரத்தில் பட்டம் விட்டு கவனயீர்ப்பு போராட்டம்!



 வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்து 100 நாட்கள் செயல் முனையின் ஊடாக வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இன்று திருக்கோவில் விநாயகபுரம் கடற்கரையில் வானில் பட்டம் விட்டு கோரிகை விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் திருக்கோவில் விநாயகபுரம் கடற்; கரையில் இப் பட்டம் விடும் நிகழ்வு இன்று நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் கிராம அடிப்படை அமைப்புக்கள் விவசாய மீனவ சங்கங்கள் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் மாணவ அமைப்புக்கள் சிவில் அமைப்புக்கள் என்ப ஒன்றினைந்து இவ் பேரணியை நடாத்தி இருந்தன.

நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை. நாட்டுக்குள் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13வது திருத்தச் சட்டமானது அரசியல் அமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது போன்ற கோரிக்கைகளை முன்னிருத்தி தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இவ்வாறான கவனயீர்பபு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது