காத்தான்குடிக்கு ஐஸ் போதைப்பொருளை கடத்திய நபர் கைது !



ஏறாவூரிலிருந்து காத்தான்குடிக்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய நபரை கைது செய்துள்ளதுடன், அந்நபரிடமிருந்து 10 கிராமும் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனைக்கமைய, குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகார் ரஹீமின் வழ்காட்டலில் விசேட பொலிஸ் குழுவினர், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.