மட்டக்களப்பு கொம்மாதுறைத்தீவு வீரபத்திர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் !




(சிஹாரா லத்தீப் )
மட்டக்களப்பு கொம்மாதுறைத்தீவு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு பால் குடபவனியும் ,1008 சங்காபிஷேகமும் ஞாயிற்றுக்கிழமை  மிக சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு கொம்மாதுறைத்தீவு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய புணராவர்த்தன ஜீரணோர்த்தாரன பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு பிரதம குரு சிவஸ்ரீ அருட்பிரகாச லிகிதராஜக் குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் விசேடயாக பூசை மற்றும் விசேட அபிசேக பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல மூர்த்தி வீரபத்திர சுவாமி அபிசேகம் செய்யப்பட்டு தொடர்ந்து 1008 அஷ்டோத்திர சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது

இவ் ஆலய மகா கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொம்மாதுறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தரிஷ்ணன் தலைமையில் விநாயகர் வழிபாடுகளுடன் ஆலயத்தில் 

இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட பால்குட பவனியானது மேளதாளங்கள் முழங்க அடியார்கள் பால்குடங்களை ஏந்தியவாறு வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக ஆலயத்தினை வந்தடைந்தது ,இதனை தொடர்ந்து அடியார்கள் கொண்டுவந்த பால் ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் 1008 அஷ்டோத்திரசங்காபிஷேகமும் தீபாராதனையும் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.