இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது !



இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்த படகில் பயணித்த 14 மீனவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல் வளதிணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்று இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.