தென்கொரியாவில் தொழில் வாய்ப்புகளுக்காக மேலும் 301 பேர் பயணம் !


தென்கொரியாவில் தொழில் வாய்ப்புகளுக்காக மேலும் 301 பேர் இந்த வாரம் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

முதல் குழுவில் 134 பேரும், இரண்டாம் குழுவில் 132 பேரும் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.