கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி


 (ரவ்பீக் பாயிஸ்)

கிழக்கு  பல்கலைக்கழகத்தின்  திருகோணமலை வளாக மாணவர்கள்  40க்கும் மேற்பட்டோர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தள வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவர்களுள் 30 பெண் பல்கலை கழக மாணவர்களும் 10க்கும் அதிகமான ஆண் மாணவர்களும் அடங்குவதாகவும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள்  காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று  போன்ற நோய் அறிகுறிகள்  இருப்பதாக கூறியே வையத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது

குறித்த மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமையாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிப்பதாகவும் நாளையத்தினம் கிழக்கு பல்கலை கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கு பரீட்சை ஒன்றும் நடத்தப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.