சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது !


சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயது சிறுவனை அதே இல்லத்தில் பணியாற்றும் காப்பாளர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (நவ 17) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரால் சிறுவன் துன்புறுத்தப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மன்னாரை சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.