பாலியல் குற்றச்சாட்டு : தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு!


பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்றையதினம் சிட்னி நீதிமன்றில் ஆஜரான நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிணை கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர், சிட்னி பொலிஸாரினால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.