முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு : உணவு பாதுகாப்பு அமைச்சு !


கோழி முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டுபிடிக்க இன்று (08) முதல் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது கால்நடை தீவனங்களின் விலையும் குறைந்துள்ளதால், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த திடீர் சுற்றிவளைப்பை மேற்கொள்ளும் என அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.