துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் உயிரிழப்பு !



மினுவாங்கொடை, ஜாபாலவத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழழை (18) இடம்பெற்றுள்ளது.

பொத்தல, வல்பிட்ட வடக்கு மற்றும் பொத்தல, முலான ஆகிய பகுதிகளில் வசிக்கும் இரு பாதாள உலக உறுப்பினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.