கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம் : குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் !


கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை தாமதமடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் மறு அறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.