ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தென்னாபிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு !


தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் போது ஜனாதிபதி ரமபோசா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.