வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !



கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று காலை வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.