மட்டக்களப்பு பெரியகல்லாறு பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த குடும்பஸ்தரை தேடும் நடவடிக்கை !



மட்டக்களப்பு, பெரியகல்லாறு பாலத்திலிருந்து இன்று காலை குடும்பஸ்த்தர் ஒருவர் குதித்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் கோட்டைக்கல்லாறை சேர்ந்த சங்கரப்பிள்ளை நிரோஜன் என்பவரே இவ்வாறு வாவியில் குதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து , மீனவர்களின் உதவியுடன் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.