இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது !



இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசாரத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

தோல் நிறமாற்றம் காணப்பட்டாலோ அல்லது விரல்கள் மற்றும் கால்களில் உணர்வின்மை, தசை பலவீனம் அல்லது பக்கவாதம் போன்றவற்றை உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.