ரயில் மோதி இளைஞன் பலி !


ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் சித்தாண்டி - முறக்கொட்டான்சேனை தேவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி - 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.