கட்டுப்படுத்தப்பட்ட சில தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் : ஹேமந்த ஹேரத் !




கட்டுப்படுத்தப்பட்ட சில தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நாட்டில் தொழுநோய் மற்றும் காசநோய் மீண்டும் பரவி வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.