ராஜினாமாவிற்கு பிறகு முதல் தடவையாக நிகழ்வில் கலந்துக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஸ

 ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ஸ நிகழ்வொன்றில் இன்று (நவ.18) கலந்துக்கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இவ்வாறு கலந்துக்கொண்டிருந்தார்.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், ஜுலை மாதம் 13ம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஸ, ஜுலை மாதம் 14ம் திகதி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அதன்பின்னர், நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ஸ பொது நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவில்லை.

எனினும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக சுப்ரமணியம் சுவாமியுடன், கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது.

அதனைத் தொடர்;ந்து, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் பொது வெளி நிகழ்வொன்றிற்கு முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ஸ கலந்துக்கொண்டுள்ளார்