மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு !



படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியில் பணிபுரியும் போது அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.