எங்களது ஆயுதமே விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெற உதவியது : பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் !



பாக்கிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என தெரிவித்துள்ளார்

டோவ்ன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது டோவ்ன் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன.

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கை விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு உதவின என தெரிவித்துள்ளார்.

எங்கள் இராணுவ தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்தார் டோவ்ட்சன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் தெரிவித்துள்ளார். தனது நிறுவனத்தின் 30 வீதமான வருமானம் ஏற்றுமதி மூலம் பெறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.