உரங்களை கொள்வனவு செய்வதற்கு 16,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு !



2022/23 பொரும்போகத்திற்காக உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 16,000 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், உரங்களை கொள்வனவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளதாக கூறினார்.

விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உரங்களை விநியோகிப்பதற்காக தீவின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக மாவட்டக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.