பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச புத்தகங்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொசவின் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு  சதொச நிலையங்ளில் இருந்து உயர்தர அப்பியாச புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அவர்  கூறியுள்ளார். 

அரச அச்சக  கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாச புத்தகங்கள் நாடு பூராகவும் உள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.